spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

-

- Advertisement -

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது  படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் விசைப்படகில நேற்று கோடியக்கரைக்கு தென்கி ழக்கே மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

we-r-hiring

2024-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 324 மீனவர்களும், 44 படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுபோன்ற தொடர் கைது நடவடிக்கைகளால் தமிழ்நாட்டு மீனவ சமூகத்தினர் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருவதுடன் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த 2 வாரங்களில், இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள், கடலில் தமிழ்நாட்டு மீனவர்களைத் தாக்கிய சம்பவங்களை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், இந்த பிரச்சினைக்கு உனடியாக தீர்வு காண வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

எனவே கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விரைந்து விடுவிக்க உறுதியான துதரக நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

MUST READ