
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, கூட்டணி கட்சியினருடன் தொகுதிப் பங்கீடு குறித்து, பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கவும் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
தொடர்ந்து ஏற்றம் காணும் தங்கம் விலை – கவலையில் இல்லத்தரசிகள்!
அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கைத் தயாரிப்புக் குழுவில் 10 பேர் இடம் பெற்றுள்ளனர். குழுவில் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்ப்பது, ஓ.எஸ்.மணியன், உதயகுமார், வைகைச்செல்வன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்டுள்ளக் குழுவில், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பென்ஜமின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதேபோல் தேர்தல் பரப்புரைக் குழுவில், தம்பிதுரை, செங்கோட்டையன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
எல்.இ.டி. திரைகள் அகற்றம்- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம்!
தி.மு.க. ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கிய நிலையில், அ.தி.மு.க.உன் தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் தேர்தல் அரசியல் சூடுபிடித்துள்ளது.