Homeசெய்திகள்தமிழ்நாடுமக்களவைத் தேர்தல்- நாளை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை!

மக்களவைத் தேர்தல்- நாளை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை!

-

- Advertisement -

 

வயநாடு தொகுதியில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆயத்தம்!
File Photo

2024 மக்களவைத் தேர்தலுக்கு மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் என அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றனர். கூட்டணி அமைப்பது, தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்வது உள்ளிட்டப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம், ஆங்காங்கே பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

ஆம்னி பேருந்துகளில் செல்லும் பயணிகளின் கவனத்திற்கு!

இந்த நிலையில், சென்னையில் நாளை (நவ.09) காலை 09.30 மணிக்கு 2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாக, தென் மாநில தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். கூட்டத்தில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளும், அந்தமான், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேச அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும் ஒரு பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்தார் அமைச்சர் பொன்முடி!

இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்துவது, வாக்காளர் பட்டியல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவைக் குறித்தும், வாக்குச்சாவடி மையங்கள் குறித்தும் ஆலோசிக்கவுள்ளனர்.

MUST READ