spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்காதல் ஜோடி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

கள்ளக்காதல் ஜோடி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

-

- Advertisement -

கள்ளக்காதல் ஜோடி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

தேனி அருகே கள்ளக்காதல் ஜோடி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தேனி மாவட்டம் அரண்மனைப் புதூர் அருகே உள்ள அய்யனார்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகுடேஸ்வரன்(45). விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர்.‌ மகுடேஸ்வரனின் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில், அவருக்கு ஆண்டிபட்டி அருகே உள்ள அம்மச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்த கருப்பையா மனைவி அமரஜோதி (40) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு இருவரும் பழகி வந்ததாக கூறப்படுகிறது. தனியார் ஆலையில் வேலை செய்து வந்த அமரஜோதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

we-r-hiring

இந்நிலையில் இன்று காலை அய்யனார்புரம் அருகே உள்ள பள்ளப்பட்டி சாலையில் தனியார் தோட்டத்தில் மகுடேஸ்வரன் மற்றும் அமரஜோதி இருவரும் ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இன்று காலை தோட்டத்திற்கு சென்ற அப்பகுதி மக்கள் அளித்த தகவலில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சவுக்கு மரத்தில் வயரில் தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந்த சடலங்களை கைப்பற்றி, உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு தேனி காவல் துணைக் கண்காணிப்பாளர் பார்த்திபன் நேரில் ஆய்வு செய்தார்.‌

இது தொடர்பாக பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்திய முதற்கட்ட விசாரணையில், திருமணத்தை தாண்டிய உறவு காரணமாக ஏற்பட்ட பிரச்சினையால் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனத் தெரியவந்தது.

MUST READ