spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசொகுசுப் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து!

சொகுசுப் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து!

-

- Advertisement -

 

சொகுசுப் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து!

we-r-hiring

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே சாலைத் தடுப்பில் மோதி, சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 20- க்கும் அதிகமான பயணிகள் படுகாயமடைந்தனர்.

‘தி கோட்’ படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் எப்போது?

நாகர்கோவில் இருந்து தனியார் சொகுசுப் பேருந்து 30 பயணிகளுடன் சென்னையை நோக்கி வந்துள்ளது. உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்திற்கு அருகே வந்த போது, எந்தவித எச்சரிக்கை பலகையும் அங்கு இல்லாததால், பேருந்து அணுகு சாலை வழியாகச் சென்றுள்ளது.

அப்போது, சாலையின் தடுப்பில் மோதி, சொகுசுப் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் மற்றும் பயணிகள் உள்பட 20- க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ஜூன் மாதத்தில் மோதும் 2 கமல்ஹாசன் படங்கள்…. இதுதான் ரிலீஸ் தேதியா?

விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், சாலையில் கவிழ்ந்திருந் சொகுசுப் பேருந்தை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ