அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் மா. சுப்பிரமணியன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனது வீட்டில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர் கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.