Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

-

 

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
Photo: Minister Senthil Balaji

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் இன்று (ஜூன் 13) காலை 09.00 மணி முதல் மத்திய அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், கரூர் மாவட்டம், ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் மத்திய படையினரின் பாதுகாப்புடன் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

“மாநிலத் தலைமைக்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை”- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

வருமான வரித்துறை சோதனையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய, சேலம், கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். அமைச்சரின் நண்பர், உறவினர்களின் வீடு, அலுவலகங்களில் எட்டு நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க. கூட்டணி குறித்து மறுபரிசீலனை?- கூடுகிறது அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

இதனிடையே, அமலாக்கத்துறையினரின் சோதனை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “அமலாக்கத்துறையின் விசாரணைக்கு நேரில் ஆஜராக இருக்கிறேன்; சோதனை நடந்து வருகிறது; முடிவில் தான் எங்கு ஆஜராவது எனத் தெரிய வரும். அமலாக்கத்துறைச் சோதனைக்கு முழு ஒத்துழைப்புத் தரப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ