Homeசெய்திகள்அரசியல்"மாநிலத் தலைமைக்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

“மாநிலத் தலைமைக்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை”- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

-

 

"மாநிலத் தலைமைக்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!
File Photo

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை ஆங்கில நாளிதழுக்கு அளித்தப் பேட்டிக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடுப்பான அமித்ஷா! எட்டி உதைத்த அண்ணாமலை!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அண்ணாமலை நாவடக்கத்தோடு பேச வேண்டும். அ.தி.மு.க. குறித்து பொறுப்பற்ற முறையில் பேசுவதைப் பொறுத்துக் கொள்ள மாட்டோம். கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சியின் ஊழல் குறித்து அண்ணாமலை பேசாதது ஏன்? அண்ணாமலைக்கு ஒரு வரலாறும் தெரியாது; பாரம்பரியமும் தெரியாது. தன்னை முன்னிலைப்படுத்தும் நோக்கில் அ.தி.மு.க. மீது சேற்றை வாரி இறைக்கிறார். ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியது கடும் கண்டனத்துக்குரியது. அண்ணாமலையின் பேச்சால் ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டனும் கொதித்துப்போகும் நிலையை உருவாக்கிவிட்டார். மாநிலத் தலைமைக்கு கிஞ்சித்தும் தகுதி இல்லாதவர் அண்ணாமலை. தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் தான் பா.ஜ.க.வுக்கு அடையாளம் உள்ளது.

பா.ஜ.க. கூட்டணி குறித்து மறுபரிசீலனை?- கூடுகிறது அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

கூட்டணியை முறிக்கும் வகையில் அண்ணாமலையின் செயல்பாடு உள்ளது. அண்ணாமலையை ஜெ.பி.நட்டா, அமித்ஷா கண்டிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். அண்ணாமலையின் இதே போக்கு தொடர்ந்தால் கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யக்கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ