தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், வாக்களித்து தனது ஐனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.
“உலகின் மிகப்பெரிய மக்களாட்சித் திருவிழா”- எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர், துணை ராணுவப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் அமைதியான முறையில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர்.
“தமிழகத்தில் 12.55% வாக்குப்பதிவு”- தேர்தல் ஆணையம் தகவல்!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு தனது மனைவி கிருத்திகா உதயநிதியுடன் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்களோடு மக்களாக நீண்ட வரிசையில் காத்திருந்து தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.