- Advertisement -
தமிழ்நாட்டைச் சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவா்கள் வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம் ஒதுக்கி இருப்பதாகத் தமிழ்நாடு உறைவிடம் மருத்துவ சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.தமிழ்நாட்டைச் சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவர்கள் 25% க்கும் அதிகமானவர்களுக்கு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம் ஒதுக்கி இருப்பதாகத் தமிழ்நாடு உறைவிடம் மருத்துவ சங்கம் குற்றச்சாட்டியுள்ளது. ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையத்தை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வு வரும் ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.