Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

-

- Advertisement -

 

தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
Video Crop Image

தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைத் தீவிரமடைந்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்தது.

நவீன எரிவாயு மேடையில் எரியூட்டப்பட்ட மருத்துவ மாணவரின் உடல்!

இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. 11 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், மழைநீர் தேங்கும் பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்கவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

MUST READ