![கோரிக்கை மனு அளித்த பெண்.... விமான நிலையத்திற்கு அழைத்து ஆணையை வழங்கிய முதலமைச்சர்!](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2023/06/dis-1.jpg)
மூன்று நாள் அரசுமுறை பயணமாக, சேலம் மாவட்டத்திற்கு வந்திருந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று (ஜூன் 11) மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை வேண்டி கோரிக்கை மனு அளித்த சேலம் மாவட்டம், மேற்கு வட்டம், மல்லமூப்பம்பட்டி, மூலக்கடைப் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ராஜேஸ்வரி மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் அடிப்படையில், அவரது கோரிக்கைக்குத் தீர்வு காணப்பட்டு இன்று (ஜூன் 12) காலை 11.30 மணிக்கு சேலம் விமான நிலையத்தில், மாற்றுத் திறனாளி ராஜேஸ்வரிக்கு கடும் உடல் ஊனமுற்றோருக்கான மாதாந்திர உதவித் தொகையான ரூபாய் 2,000, இந்த மாதம் முதல் வழங்குவதற்கான ஆணையினை தமிழக முதலமைச்சர் வழங்கினார்.
ஜெயலலிதா ஊழல்வாதி- அண்ணாமலை பரபரப்பு பேட்டி
இந்த நிகழ்வின் போது, முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.