Homeசெய்திகள்தமிழ்நாடுபிரபல ரவுடி பாம் சரவணனை சுட்டுப் பிடித்த போலீசார்!

பிரபல ரவுடி பாம் சரவணனை சுட்டுப் பிடித்த போலீசார்!

-

- Advertisement -

சென்னையில் போலீசார் மீது நாடு வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பியோட முயன்ற ரவுடி பாம் சரவணனை போலீசார் காலில் சுட்டு பிடித்துள்ளனர்.

சென்னை புளியந்தோப்பு வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் சரவணன் என்ற பாம் சரவணன் (வயது 41). பிரபல ரவுடியான இவர் மீது 6 கொலை வழக்குகள், 2 வெடிகுண்டு வீசிய வழக்கு உள்ளிட்ட 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பரும், பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளருமான தென்னரசுவின் சகோதரரும் ஆவார்.  பாம் சரவணன், 3 கொலை வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை பிடிக்க நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது. இதனால் பாம் சரவணன் தலைமறைவாக இருந்த நிலையில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே, ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளரான பாம் சரவணன் அவரது கொலைக்கு பழிவாங்க திட்டமிட்டு தலைமறைவாக உள்ளதாகவும்,  அவர் பழி தீர்க்க திட்டம் தீட்டி வருவதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்நிலையில் பாம் சரவணன் யாருடன் தொடர்பில் இருக்கிறார் என்பது குறித்து ரவுடிகள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை ஈடுபட்டு வந்தனர். அதில் அவர் ஆந்திராவில் தஞ்சமடைந்து இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று சித்தூர் மாவட்டம் வரதப்பாளையம் பகுதியில் வைத்து ரவுடி பாம் சரவணனை  கைதுசெய்தனர். பின்னர் அவரை, சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில் சென்னை எம்.கே.பி நகரில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக பாம் சரவணனை தனிப்படை போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது பாம் சரவணன் அங்கு மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வீசி கத்தியால் எஸ்.ஐ. மணியை வெட்டிவிட்டு தப்யோட முயன்றுள்ளார். முல்லை நகர் சுடுகாடு அருகே புளியந்தோப்பு காவல் ஆய்வாளர் அம்பேத்கர், பாம் சரவணனை தற்காப்புக்காக இடதுபக்க காலில் சுட்டு மடக்கி பிடித்தார். காயமடைந்த ரவுடி பாம் சரவணனை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், பாம் சரவணன் இடமிருந்து 4 நாட்டு வெடிகுண்டுகள் ஒரு கத்தி மற்றும் 5 கஞ்சா பார்சல்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ