பொங்கல் பண்டிகையையொட்டி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
“இருமொழிக் கொள்கையே தொடரும்”- தமிழ்நாடு அரசு விளக்கம்!
தொடர் விடுமுறை என்பதால், அதிகளவிலான பார்வையாளர்கள் வரக்கூடும் என்பதால், உயிரியல் பூங்கா நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். திருவள்ளுவர் தினமான வரும் ஜனவரி 16- ஆம் தேதி உள்பட பொங்கல் பண்டிகையின் அனைத்து நாட்களிலும், உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் முன்பதிவுச் செய்ய 10 நேரடி கவுண்ட்டர்கள், ஆன்லைன் டிக்கெட் வசதி மற்றும் கியூஆர் குறியீடு அடிப்படையிலான டிக்கெட் அமைப்பு ஆகியவை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 130 சீருடை வன ஊழியர்கள், 100 காவல்துறை பணியாளர்கள் மற்றும் 150 என்.எஸ்.எஸ். மற்றும் என்.சி.சி. மாணவர்கள் ஆகியோர் இணைந்து கூட்டத்தை நிர்வகிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியினர் மீது பாஜகவினர் கொலைவெறி தாக்குதல் – சீமான் கண்டனம்!
பாதுகாப்பு காரணங்களுக்காக நுழைவு வாயிலில் மூன்று மெட்டல் டிடெக்ட்டர்களும், பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களும், அறிவிப்பு ஒலிப்பெருக்கிகளும் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்து பூங்காவிற்கு வர இலவச போக்குவரத்துச் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.