spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபதிவுத் தபால் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தம்... சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!

பதிவுத் தபால் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தம்… சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!

-

- Advertisement -

பதிவுத் தபால் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தப்படுவது, மக்களை தனியார் கூரியர் நிறுவனங்களை நோக்கி தள்ளுகிற ஏற்பாடு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 128 ஆண்டு நடைமுறையில் இருந்த பதிவுத் தபால் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தப்படுவதாகவும், விரைவுத் தபால் சேவையுடன் இணைப்பு என அஞ்சல்துறை அறிவித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.  பதிவுத் தபால் சேவை குறைந்தபட்ச கட்டணம் ரூ.26, விரைவுத் தபால் எனில் ரூ.41 பதிவுத் தபால் ஒப்புகை கட்டணம் ரூ.3 விரைவுத் தபாலில் ரூ.10 பதிவுத் தபால் நபருக்கே போய்ச் சேரும் என்றும், விரைவுத் தபால் முகவரிக்கு போய்ச் சேரும் என்று தெரிவித்துள்ளார்.

Su.Venkatesan - சு.வெங்கடேசன்

பதிவுத் தபால் எடை கூடினால் மட்டுமே கட்டணம் கூடும். தேசம் முழுக்க எவ்வளவு தூரம் என்றாலும் ஒரே கட்டணம். அதேவேளையில் விரைவுத் தபால் எடை கூடினாலும் கூடும். தூரம் கூடினாலும் கூடும். எல்லாம் எதற்கு? என்று கேள்வி எழுப்பியுள்ள சு.வெங்கடேசன், மக்களை தனியார் கூரியர் நிறுவனங்களை நோக்கி தள்ளுகிற ஏற்பாடு என்று குற்றம்சாட்டியுள்ளார். “தக் சேவா; ஜன் சேவா” என்பது அஞ்சல் துறையின் முழக்கம். அதாவது அஞ்சல் சேவை மக்கள் சேவையாம். உண்மையில் “மோடி சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே” என்று சு.வெங்கடேசன் சாடியுள்ளார்.

MUST READ