
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது ரூபாய் 1 கோடி நஷ்ட ஈடுக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’- என்னென்ன பரிந்துரைகள்?
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தி.மு.க.வைத் தொடர்புப்படுத்திப் பேசியதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது ரூபாய் 1 கோடி நஷ்ட ஈடுக்கோரி, தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், ஜாஃபர் சாதிக்கை தி.மு.க.வுடன் தொடர்புப்படுத்தி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அதேபோல், போதைப்பொருள் பறிமுதல், கைது நடவடிக்கைகளில் தி.மு.க.வைத் தொடர்புப்படுத்தி எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். தி.மு.க.வின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருக்கிறது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தி.மு.க.வைத் தொடர்புப்படுத்தி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிப்பதுடன், ரூபாய் 1 கோடி நஷ்ட வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஆபாசக் காட்சிகள்- ஓடிடி, இணையதளங்கள் முடக்கம்!
இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.