- Advertisement -
ரம்மி – ஆளுநர் செயல் ஏற்புடையதல்ல – ப.சி.
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை தமிழ்நாடு ஆளுனர் திருப்பி அனுப்பியது தவறு என, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், ஆன்லைன் ரம்மி ரத்து செய்வதற்கான சட்ட மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்புடையது அல்ல என தெரிவித்தார்.

குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றுவது மாநில அரசின் உரிமை என தெரிவித்த ப.சிதம்பரம், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் ஒரு குற்றவியல் சட்டம் எனவும், வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது என்பது பொது புரளி என்றும், இதை பாஜகவும், ஆர்எஎஸ் அமைப்பும் ஊதிவிடுவதாக கூறினார்.