சைனிக் பள்ளிகளில் 6, 9- ஆம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் வரும் டிசம்பர் 16- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
நிதி நிறுவனம் நடத்தி ரூ.400 கோடி வரை மோசடி
இதுதொடர்பாக, தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் (Sainik schools) அமைந்துள்ளன. இவற்றில் 2024-25-ம் கல்வியாண்டில் 6, 9- ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத்தேர்வு அடுத்தாண்டு ஜனவரி 21- ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு, https://aissee.nta.nic.in/ என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று வரும் டிசம்பர் 16- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி. / எஸ்.டி. பிரிவினருக்கு 500 ரூபாயும், இதர பிரிவினருக்கு 650 ரூபாயும் விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பக் கட்டணத்தை இணையவழி மட்டுமே செலுத்த வேண்டும். இது தவிர விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தகுதிகள், ஹால் டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று அறிந்துக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகலில் கூலி வேலை! இரவில் திருட்டு!! –
அமராவதி நகர் சைனிக் பள்ளி, சமுதாயத்தின் ஒரு பகுதியாக, கடந்த 1962- ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16- ஆம் தேதி தொடங்கப்பட்டது. இது 1975- ஆம் ஆண்டு வரை சைனிக் பள்ளி, மெட்ராஸ் (எஸ்.எஸ்.எம்) என அழைக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் சைனிக் பள்ளி உருவாக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள மூன்று படைகளிலும் நுழையும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி அளிக்கிறது. இந்திய கடற்படை அகாதமி (ஐ.என்.ஏ) இந்திய கடற்படைக்குள் நுழையும் கடற்படை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.