Homeசெய்திகள்தமிழ்நாடுபள்ளிகள் திறப்பு ஜூன் 10-க்கு ஒத்திவைப்பு

பள்ளிகள் திறப்பு ஜூன் 10-க்கு ஒத்திவைப்பு

-

பள்ளிகள் திறப்பு ஜூன் 10-க்கு ஒத்திவைப்பு

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பை ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு ஜூன் 10-க்கு ஒத்திவைப்பு

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் இறுதியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து விடுமுறை முடிந்து வருகின்ற 6 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கத்திரி வெயில் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் அதிகரித்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி பதிவாகி வருகிறது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பள்ளிகள் திறப்பு ஜூன் 10-க்கு ஒத்திவைப்பு

இந்நிலையில் மாணவர்கள் நலம் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விடுமுறையை நீடித்து ஜூன் 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஏற்கனவே வெப்பம் காரணமாக புதுவையில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

MUST READ