spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இரண்டு மணி நேரமாக அறுவைச் சிகிச்சை!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இரண்டு மணி நேரமாக அறுவைச் சிகிச்சை!

-

- Advertisement -

 

செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றம்!
Photo: Kauvery Hospital

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருக்கு இதயத்தில் மூன்று நாளங்களில் அடைப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அமைச்சருக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சையை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைச் செய்தனர். அதேபோல், இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவர்களும் அமைச்சருக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சையைச் செய்ய பரிந்துரைச் செய்திருந்தனர்.

we-r-hiring

கேஜிஎப் இயக்குனர் பிரபாஸ் கூட்டணியின் சலார்… மிகவும் எதிர்பார்க்கப்படும் டீசர் ரிலீஸ் அப்டேட்!

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்கோரி, அவரது குடும்பத்தினர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதை விசாரித்த நீதிபதி அல்லி, அமைச்சரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டார். அத்துடன், அமலாக்கத்துறையின் மனுவையும் விசாரித்த நீதிபதி அல்லி, அமைச்சரை எட்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டிருந்தார். மேலும், மருத்துவமனையிலேயே அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். தற்போது, அந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று (ஜூன் 21) காலை 05.15 மணிக்கு அறுவைச் சிகிச்சைத் தொடங்கியது. இதய அறுவைச் சிகிச்சை ரகுராமன் தலைமையிலான மருத்துவக் குழு, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கிகிச்சை மேற்கொண்டு வருகிறது.

ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 படத்தின் பரபரப்பான அப்டேட்!

செந்தில் பாலாஜிக்கு இதய அறுவைச் சிகிச்சை சுமார் 4 முதல் 5 மணி நேரம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், இன்னும் சில மணி நேரத்தில் அமைச்சரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ