Homeசெய்திகள்தமிழ்நாடுசிங்கை ராமச்சந்திரன், அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

சிங்கை ராமச்சந்திரன், அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

-

 

சிங்கை ராமச்சந்திரன், அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

கோவையில் அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை ஆகியோர் மீது கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெற்றி கணக்கை தொடங்குமா மும்பை – டெல்லி அணியுடன் இன்று மோதல்!

கோவை மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் அண்ணாமலையும், அ.தி.மு.க. சார்பில் சிங்கை ராமச்சந்திரனும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், மாதப்பூர் ஊராட்சிக்குட்பட்ட தொட்டிப்பாளையம் பகுதியில் இரவு 07.00 மணிக்கு சிங்கை ராமச்சந்திரன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பரப்புரை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு பிரச்சாரம் செய்த பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை தனது ஒதுக்கப்பட்ட நேரத்தை விட தாமதமாக வந்துள்ளார். மேலும், பா.ஜ.க.வின் பிரச்சார வாகனம் ஒன்று அ.தி.மு.க.வின் பரப்புரை வாகனத்தை உரசி முந்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அ.தி.மு.க. வேட்பாளர் மற்றும் நிர்வாகிகள் அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அண்ணாமலை மீது அ.தி.மு.க. சார்பில் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மற்றொரு ஆட்டத்தில் லக்னோvsகுஜராத் அணிகள் பலப்பரீட்சை!

அதேபோல், பா.ஜ.க. சார்பில் அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பா.ஜ.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ