கனமழை பெய்து வரும் தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் முழுமையாகக் குவிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விருதுநகர், மதுரைக்கு ரெட் அலர்ட்!
கோவை மாவட்டம், காந்திபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தைத் தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கனமழை பெய்து வரும் தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் முழுமையாகக் குவிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயங்குமா?
மக்கள் அளிக்கும் ஒவ்வொரு மனுக்களுக்கும் தீர்வுக் கிடைக்க வைப்பதே நோக்கமாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உடனடியாக நிவாரணம் சென்றடையும். சென்னையில் மீட்புப் பணியில் ஈடுபட்டதைப் போல் தென் மாவட்டங்களிலும் ஈடுபட்டு மக்களைக் காப்போம். மக்களின் தேவையை அறிந்து செயல்படும் அரசாக உள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு கவனம் செலுத்தி தனித்தனி திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.