spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா: அமைச்சர்களின் துறைகள் மாற்றம்?

ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா: அமைச்சர்களின் துறைகள் மாற்றம்?

-

- Advertisement -

 

Photo: TN Govt

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் தர்பார் ஹாலில் நாளை (மே 11) காலை 10.30 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், அமைச்சராக, மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

we-r-hiring

பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கு- தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை!

எளிமையான முறையில் நடைபெறும் விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்ய, அவர் முடிவு செய்திருப்பதாகவும், அது தொடர்பான பரிந்துரையை ஆளுநர் மாளிகைக்கு முதலமைச்சர் அனுப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இலாகா மாற்றம் தொடர்பான அறிவிப்பு நாளை (மே 11) காலை 11.00 மணிக்கு ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு தலைவர் பா.ஜ.க.வின் வசுந்தரா ராஜேதான்”- சச்சின் பைலட் குற்றச்சாட்டு!

அதன்படி, நிதித்துறை மற்றும் மனிதவளம் மேலாண்மைத் துறை அமைச்சராக தங்கம் தென்னரசுவும், தகவல் தொழில்நுட்பத் துறையை பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும், பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜும், தொழில் மற்றும் முதலீடு துறை அமைச்சராக டி.ஆர்.பி.ராஜாவும் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ