தமிழ்நாட்டில் இன்று 605 வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி பெட்ரோல் 1 லிட்டருக்கு ரூ.102.63 க்கும், டீசல் 1 லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2021, நவம்பர் 3 அன்று பெட்ரோலின் விலை ரூ.110 /லிட்டர், டீசலின் விலை ரூ.102.59/லிட்டர் என்ற அளவில் விற்கப்பட்டது உச்சபட்ச விலையாக அறியப்பட்டது. பின்னர் அதைத் தொடர்ந்து ஐந்து மாநிலங்களின் தேர்தலை கருத்தில் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. அன்றாட போக்குவரத்துக்காக பொதுமக்கள் பெட்ரோல், டீசலை பெரிதும் நம்பி உள்ளனர்.
அதே சமயம் ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போர் ஆகிய காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவிலும் எரிபொருள்களின் விலை அதிகரிக்கும் அபாயம் இருந்தது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022, மே 21 அன்று அறிவித்த அறிவிப்பின்படி பெட்ரோல் மீதான கலால் வரி 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 7.50 ரூபாயும் குறைக்கப்பட்டது. அதன் விளைவாக இன்று 605 வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.
- Advertisement -