Homeசெய்திகள்தமிழ்நாடுகாரை ஓட்டிய தொழிலதிபர் உயிரிழப்பு

காரை ஓட்டிய தொழிலதிபர் உயிரிழப்பு

-

- Advertisement -

காரை ஓட்டிய தொழிலதிபர் உயிரிழப்பு

கோவை மாநகரம் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் விஷ்ணு ராம் (32). பழைய சொகுசு கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது நண்பர் எண்ணெய் ஆலை திலீபன் (வயது 32). இருவரும் நேற்று தொழில் விஷயமாக காரில் சென்னை வந்துவிட்டு இன்று அதிகாலை கோவை நோக்கி புறப்பட்டனர்.

காரை ஓட்டிய தொழிலதிபர் உயிரிழப்பு
விஷ்ணு ராம்

சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

காரை ஓட்டிய தொழிலதிபர் விஷ்ணு ராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் திலீபன் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எத்தனை கோடி கையெழுத்து வாங்கினாலும் ஆளுநரை மாற்ற முடியாது- வானதி சீனிவாசன்

இந்த விபத்து தொடர்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கார் ஓட்டும்போது கண் அயர்ந்ததால் விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது.  இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

MUST READ