தலைநகர் டெல்லியிலுள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் மதராசி முகாம் மக்களுக்கு முதல்வர் அறிவித்த நிவாரண தொகுப்புகள் தற்போது வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக 150 பேருக்கு தொகுப்புகள் வழங்கப்படுகிறது.தலைநகர் டெல்லியில் உள்ள மதராசி முகாமில் வசித்த பாதிக்கப்பட்டுள்ள தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு அறிவித்திருந்தார். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழாின் குடும்பத்திற்கும் ரூ.8 ஆயிரம் நிதியுதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியிலுள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் மதராசி முகாம் மக்களுக்கு முதல்வர் அறிவித்த நிவாரண தொகுப்புகள் தற்போது வழங்கப்படுகிறது. தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம். நாசர், நிவாரண தொகுப்புகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குகிறார். டெல்லியில் மதராசி முகாமில் 370 தமிழ் குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் மாநில அரசின் உள்கட்டமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக குடியிருப்பு முழுமையாக எடுக்கப்பட்டது.
இதில் 189 குடும்பங்களுக்கு மட்டுமே மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க டெல்லி மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கிடையில் தமிழக முதல்வர் அறிவித்த நிவாரண தொகுப்புகள் இன்று வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக 150 பேருக்கு தொகுப்புகள் வழங்கப்படுகிறது. தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் நிவாரண தொகுப்புக்கான பதிவு செய்து வருகிறார்கள். கோதுமை மாவு, கடலை பருப்பு, துவரம் பருப்பு பச்சைப் பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், மிளகாய் தூள், உப்பு, மல்லித்தூள், அரிசி டீத்தூள் உள்ளிட்ட 15 பொருள் வழங்கப்படுகிறது.
மூத்த வழக்கறிஞருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்… உச்ச கட்ட கோபத்தில் பார் அசோசியேசன்…