Homeசெய்திகள்தமிழ்நாடுகத்தியை காட்டி வீடியோ பதிவிட்ட வாலிபர் கையில் மாவு கட்டுடன் - கைது

கத்தியை காட்டி வீடியோ பதிவிட்ட வாலிபர் கையில் மாவு கட்டுடன் – கைது

-

- Advertisement -

ஸ்ரீபெரும்புதூரில் இன்ஸ்டாகிராமில் கத்தியை காட்டி மிரட்டி புரிஞ்சுதா ராசா புரிஞ்சுதா ராசா மொக்க கத்தி எல்லாம் வெட்டாது என வீடியோ பதிவிட்ட வாலிபர் கையில் மாவு கட்டுடன் கைது

கத்தியை காட்டி வீடியோ பதிவிட்ட வாலிபர் கையில் மாவு கட்டுடன் - கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை வழிப்பறி செய்த சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த நரேஷ் குமாரை (19) ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

கத்தியை காட்டி வீடியோ பதிவிட்ட வாலிபர் கையில் மாவு கட்டுடன் - கைது

 

இந்த நிலையில் நரேஷ் குமார் இன்ஸ்டாகிராமில் கத்தியை காட்டி புரிஞ்சுதா ராசா புரிஞ்சுதா ராசா மொக்க கத்தி எல்லாம் வெட்டாது. தெரிஞ்சுக்க ராசா தெரிஞ்சுக்க ராசா உனக்கு எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது. என பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவேற்றி இருந்தார். இதைப் பார்த்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் நரேஷ் குமாரை பற்றி விசாரித்த போது நரேஷ் குமார் சுங்குவார்சத்திரம் அருகே புதுப்பட்டு கிராமத்தில் தங்கியிருப்பதாக தகவல் வந்ததை அடுத்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று நரேஷ் குமாரை பிடிக்க முயற்சித்தபோது நரேஷ் குமார் கீழே விழுந்ததில் கையில் முறிவு ஏற்பட்டது உடனே நரேஷ் குமாருக்கு மாவுகட்டு போட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

காகங்களுக்கு விஷம் வைத்து கொன்ற தம்பதியிடம் வனத்துறையினர் விசாரணை…!

MUST READ