Homeசெய்திகள்தமிழ்நாடுசட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!

சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!

-

- Advertisement -

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் சபாநாயகர் எச்சரிக்கையை மீறி கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல், கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பலரும் அருகிலுள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக சேலம், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் மற்றும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களும் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். இதுவரை 49 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், 90 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சட்டப்பேரவைக்கு அதிமுக உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து வருகை தந்தனர். மேலும் வாயிலில் அமர்ந்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயக்குமாரை குண்டுக்கட்டாக அவை காவலர்கள் வெளியேற்றினர். மேலும் சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவு பிறப்பித்தார்.

MUST READ