![ஜூலை 22- ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்!](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2023/07/mkkkyy-1.jpg)
வரும் ஜூலை 22- ஆம் தேதி அன்று காலை 10.30 மணிக்கு சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல கஞ்சா வியாபாரி ஆந்திராவில் கைது
தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நிதித்துறை மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அமைச்சர்கள் முத்துசாமி, கீதா ஜீவன், உதயநிதி ஸ்டாலின், கயல்விழி செல்வராஜ், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த உறவினர்
செப்டம்பர் 15- ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம்’ குறித்தும், அரசியல் விவகாரங்கள், தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவைக் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. அதேபோல், அமலாக்கத்துறையின் நடவடிக்கை குறித்தும், சட்டத் திருத்த மசோதாக்கள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.