வைகை, பல்லவன் ரயில்கள், தாம்பரம்- சென்னை எழும்பூர் இடையே வரும் அக்.10- ஆம் தேதி ரத்துச் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தனியார் கல்லூரி மாணவர்கள் பயணித்த பேருந்தில் தீ!
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் வரும் அக்.10- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வைகை மற்றும் பல்லவன் ரயில்கள் தாம்பரம்- சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்துச் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பட்டாசு கடை தீ விபத்து- பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!
அதன்படி, வைகை எக்ஸ்பிரஸ் ரயில், மதுரை- தாம்பரம் இடையே மற்றும் மறுமார்க்கத்தில் தாம்பரம் மதுரை இடையே இயக்கப்படும் எனவும், அதுபோல், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில், காரைக்குடி- தாம்பரம் இடையே மற்றும் தாம்பரம்- காரைக்குடிக்கு இயக்கப்படும் என தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.