சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்திற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், திரைப்பட நடிகர்கள், இயக்குநர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தே.மு.தி.க.வினர், ரசிகர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் தொடர்ந்து கண்ணீர் மல்க தங்களின் இறுதி அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.
இன்னும் சற்று நேரத்தில் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலில் இருந்து தொடங்க உள்ளது. இன்று (டிச.29) மாலை 04.45 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.வின் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
விஜயகாந்த் இறுதிச் சடங்கில், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.