spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"இளம்பெண் புகார் குறித்து உரிய நடவடிக்கை வேண்டும்"- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

“இளம்பெண் புகார் குறித்து உரிய நடவடிக்கை வேண்டும்”- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

-

- Advertisement -

 

ttv dhinakaran

we-r-hiring

தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதி மகன் வீட்டில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சரை டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

ஜன.23- ல் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்!

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.கருணாநிதி அவர்களின் மகன் வீட்டில் வேலை செய்துவந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வறுமையின் காரணமாக வீட்டுவேலைக்கு சேர்ந்த இளம்பெண்ணை கருணாநிதியின் மகனும், மருமகளும் சேர்ந்து நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கொடுமையாக தாக்கி துன்புறுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தைத் தொடக்கம்!

நன்றாக படிக்க வைக்கிறோம், படிப்புக் கட்டணத்தையும் நாங்களே செலுத்துகிறோம் என ஆசைவார்த்தைகள் கூறி பணிக்கு சேர்ந்த பின் நாள்தோறும் தன்னை அடித்து துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரின் குடும்பம் என்ற அதிகாரப்போக்கே இதுபோன்ற அறுவறுக்கத்தக்க வன்முறைச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடக் காரணம் என பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு- உச்சநீதிமன்றம் கேள்வி!

எனவே, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தி, மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்ட தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ