யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது என தற்போதைய முதலமைச்சர் விஜய் விமர்சித்திருந்ததாக குறிப்பிட்டார். மேலும், கருத்து சுதந்திரம் குறித்து பல்வேறு மேடைகளில் பேசப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால், தற்போது தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதாக தமிழிசை குற்றம்சாட்டினார். அரசின் செயல்பாடுகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுபவர்களின் கருத்துகளை ஏற்றுக்கொண்டு அவற்றை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, கைது நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விட விமர்சகர்களை கைது செய்வதில் அரசு கவனம் செலுத்துவதாகவும், இது ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானது என்றும் தமிழிசை தெரிவித்தார். யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் கூறினார். மாரிதாஸ் கைது விவகாரம் தமிழக அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கருத்து சுதந்திரம் மற்றும் எதிர்க்குரல்களின் உரிமை தொடர்பான விவாதங்களும் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
சாதிவாரி கணக்கெடுப்பை இந்த சட்டமன்ற தொடரிலேயே அமல்படுத்த வேண்டும் – முதலமைச்சருக்கு ராமதாஸ் கோரிக்கை
