Homeசெய்திகள்வானிலைரெமல் புயல் மேற்கு வங்கத்தை தாக்கக்கூடும்

ரெமல் புயல் மேற்கு வங்கத்தை தாக்கக்கூடும்

-

- Advertisement -

ரெமல் சூறாவளி தீவிரம், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் கரையை கடக்கும் என எதிர்பார்பு

ரெமல் சூறாவளி மேற்கு வங்கம் மற்றும் வங்காளதேசத்தின் கடலோரப் பகுதிகளில் நிலச்சரிவுடன் தொடங்கியுள்ளது. குறைந்தது அடுத்த நான்கு மணி நேரத்திற்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வடக்கு வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள ரெமல் புயல், மேற்கு வங்கத்தில் சாகர் தீவுகளுக்கு தென்கிழக்கே சுமார் 130 கிமீ தொலைவிலும், வங்காளதேசத்தில் கெபுபாராவிற்கு (Khepupara )தென்மேற்கே 140 கிமீ தொலைவிலும், மேற்கு வங்கத்தில் கேனிங்கிற்கு (Canning) தென்கிழக்கே 140 கிமீ தொலைவிலும், மோங்லாவிற்கு (Mongla) தென்மேற்கே 160 கிமீ தொலைவிலும் வடக்கு நோக்கி பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, இந்த சூறாவளி இன்று நள்ளிரவில் வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்காளத்தின் கரையோரங்களில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரெமல் சூறாவளி மணிக்கு 110 முதல் 120 கிலோமீட்டர் வரை அதிகபட்ச காற்றின் வேகத்தைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் அபாயங்கள் கூடுதலாக இருக்கும் என ஏற்படுத்துகிறது.

இந்தியா தனது பேரிடர் மீட்புப் படையை மேற்கு வங்கத்தில் நிலைநிறுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாநிலத்தின் முக்கிய பெருநகரமான கொல்கத்தாவில் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் ஏற்கனவே மிதமான மழை பெய்து வரும் நிலையில்  “கப்பல்கள், விமானங்கள், நீர் மூழ்காளர்கள் (Divers) மற்றும் மருத்துவப் பொருட்களை தயார் நிலையில் வைத்துள்ளோம்” என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

”துறைமுகங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 8,000 சூறாவளி முகாம்கள் அமைக்கப்பட்டு 78,000 தன்னார்வலர்களைத்  திரட்டியுள்தாக” பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரணத்திற்கான மாநில அமைச்சர் மொஹிப்பூர் ரஹ்மான் தெரிவிக்கின்றனர்.

MUST READ