spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைநடை பயிற்சி செய்த மயில்… உற்சாகத்தில் செல்பி எடுத்த மக்கள்…

நடை பயிற்சி செய்த மயில்… உற்சாகத்தில் செல்பி எடுத்த மக்கள்…

-

- Advertisement -

சென்னை திருவொற்றியூரில் பூங்காவில் நடை பயிற்சி செய்த மயில் உற்சாகத்தில் செல்பி எடுத்த நடைப்பயிற்சியாளர்கள்.

திருவெற்றியூர் அஜாக் பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி பூங்காவில் இன்று காலை மயில் ஒன்று மரத்தில் அமர்ந்திருந்தது.

we-r-hiring

காலையில் பூங்காவில் நடை பயிற்சி செய்யும் மக்கள் மயிலை கண்டு தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் இயல்பாக தங்கள் வேலையை கவனிக்கும் வகையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

 நடை பயிற்சி செய்த மயில்… உற்சாகத்தில் செல்பி எடுத்த மக்கள்…இதனால் மயில் யாரும் தங்களை கவனிக்காமல் இருப்பதைக் கண்டு மரத்திலிருந்து கீழே இறங்கி தரையில் நடந்து தானும் நடைப்பயிற்சி மேற்கொண்டது. பின்னர் சற்று நேரத்தில் அடுத்தடுத்து பூங்காவை சுற்றி வலம் வந்து மீண்டும் மரத்திற்கு சென்றது.

மெட்ரோ ரயில் மாநகரப் பேருந்து போக்குவரத்து இரைச்சல் என பரபரப்பான  மாநகரத்தில் மயில் பறந்து வந்து நடைபயிற்சியாளர்களை பரவசப்படுத்தியது ஆச்சரியப்பட வைத்துள்ளது.

MUST READ