spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'அமரன்' பட அறிமுக விழாவில் தனது தந்தையை நினைவு கூர்ந்த சிவகார்த்திகேயன்!

‘அமரன்’ பட அறிமுக விழாவில் தனது தந்தையை நினைவு கூர்ந்த சிவகார்த்திகேயன்!

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயனின் 21வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் அமரன். இந்த படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்க ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 'அமரன்' பட அறிமுக விழாவில் தனது தந்தையை நினைவு கூர்ந்த சிவகார்த்திகேயன்!கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்திருக்கிறது. படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியான நடிக்க அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். இந்த படமானது மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தன்று திரைக்கு கொண்டுவரப்பட இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டீசரும் அதைத் தொடர்ந்து முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. அடுத்ததாக வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாகவும் அதே நாளில் ட்ரெய்லர் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமரன் திரைப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி, சாய்பல்லவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் படம் குறித்த சில தகவல்களை பட குழுவினர் பகிர்ந்தனர். இது தொடர்பான வீடியோவை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது.

we-r-hiring

அதன்படி நேற்று (அக்டோபர் 7) முதல் எபிசோடு வெளியானது. அதைத் தொடர்ந்து இன்று (அக்டோபர் 8) இரண்டாவது எபிசோடு வெளியாகி உள்ளது. அந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் தனது தந்தையை நினைவுகூர்ந்துள்ளார். அதாவது சிறுவயதிலிருந்தே யூனிபார்மை பார்த்து வளர்ந்ததாகவும் நிறம் வேறுபாடாக இருந்தாலும் பொறுப்பு ஒன்று தான் எனவும் தெரிவித்திருக்கிறார். அடுத்தது முகுந்துக்கும் தன்னுடைய தந்தைக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயனின் தந்தை ஜி. தா போலீஸ் அதிகாரியாக பணியாற்றி உயிரிழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ