spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைநக்கீரன் கோபாலுக்கு எதிராக ஓம்கர்பாலாஜியை கைது செய்ய தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நக்கீரன் கோபாலுக்கு எதிராக ஓம்கர்பாலாஜியை கைது செய்ய தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

-

- Advertisement -

நக்கீரன் கோபாலுக்கு எதிராக பேசிய வழக்கில் இந்து மக்கள் கட்சி  தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன்  ஓம்கர்பாலாஜி மன்னிப்பு கேட்காததால் அவருக்கு எந்த இடைக்கால  உத்தரவும் பிறப்பிக்க முடியாது அவரை கைது செய்ய தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவு.

ஓம்கர்பாலாஜி வழக்கில் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

we-r-hiring

கடந்த மாதம் 27 ம் தேதி கோவையில்  ஈஷா யோகா மையத்திற்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில், பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலுக்கு எதிராக வெறுப்பு பேச்சு பேசியதாக அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கர் பாலாஜி மீது கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு ஓம்கர் பாலாஜி தாக்கல் செய்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பாக இன்று நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரி மனுதாக்கல் செய்ய ஓம்கர் பாலாஜிக்கு  உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு ஓம்கர்பாலாஜி நேரில் ஆஜராகி நீதிமன்ற உத்தரவுப்படி மன்னிப்பு கேட்டு மனு தாக்கல் செய்வதாக தெரிவித்தார். ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி என்று இல்லாமல் தானாக முன்வந்து மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கப்பதாகத்தான் மனு தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இதையடுத்து திருத்திய மனுவை  ஓம்கர் பாலாஜி சார்பில் மனு தாக்கல் செய்யாமல் கால அவகாசம் கேட்டனர். இதையடுத்து நீதிபதி, வழக்கை 19ஆம் தேதி ஒத்தி வைத்தார். இது தொடர்பாக அவருக்கு எந்த ஒரு இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என மறுத்துவிட்டார்.

மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி – அண்ணாமலை 

MUST READ