spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுகவை எப்படி வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளுங்கள்.!! - ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேச்சு..

திமுகவை எப்படி வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளுங்கள்.!! – ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேச்சு..

-

- Advertisement -
rs bharathi 
பெரியாரை திட்டியவர்கள் யாராயிருந்தாலும் செருப்பால் அடிக்காமல் விடக்கூடாது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மொழிப்போரில் உயிர் நீத்த தியாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. விழாவில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “தமிழகத்தில் இன்று ஏராளமானோர் மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், பொறியாளர்களாகவும் இருப்பதற்கு மூல காரணம் கல்வியில் கலைஞர் கொண்டு வந்த சீர்திருத்தமே. கலைஞர் தான் செமஸ்டர் முறையை கொண்டு வந்தார். முன்பு ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அந்த ஆண்டு அனைத்து பாடங்களிலும் மீண்டும் தேர்வு எழுத வேண்டிய நிலை இருந்தது.

கோவையில் தந்தை பெரியார் நூலகம் – அறிவியல் மய்யம்- கி.வீரமணி வரவேற்பு

we-r-hiring

இதனை மாற்றி எந்த பாடத்தில் தோல்வி அடைந்தார்களோ அந்த ஒரு பாடத்தை மட்டும் எழுதினால் போதும் என்று சட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர். அதனால் இன்று தமிழகத்தில் ஏராளமானோர் மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், பொறியாளர்களாகவும் உள்ளனர். இவர்களெல்லாம் இந்தி படித்தா வந்தார்கள்? தமிழகத்தில் நடைமுறையில் உள்ள இரு மொழிக் கொள்கையினால் தான் இவர்கள் எல்லாம் படித்தார்கள். அவர்கள் தான் உலகத்திற்கு வழிகாட்டுபவர்களாகவும் உள்ளார்கள்.

திமுக காரர்களை திட்டுங்கள் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் பெரியாரை திட்டியவர்களை சும்மா விடலாமா? யாராக இருந்தாலும் செருப்பால் அடிக்காமல் விடக்கூடாது. பெரியார் இல்லாவிட்டால் நாம் மேடை போட்டு பேச முடியுமா? பெரியார் கவுன்சிலர் கிடையாது. எம்.எல்.ஏ, எம்.பி கிடையாது. அவரால்தான் நாம் இந்த உயர்ந்த நிலைக்கு வர முடிந்தது.

மாணவர்களுக்கு திராவிட இயக்க சிந்தனைகள் குறித்து பயிற்சி எடுக்க வேண்டும். அப்போதுதான் இளைய தலைமுறையினருக்கு பெரியாரைப் பற்றி தெரிய வரும். இன்று மாணவர்களையும், இளைஞர்களை வழிநடத்த உதயநிதி ஸ்டாலின் உள்ளார் . இவர் ‘சனாதனம்’ என்கிற ஒற்றை வார்த்தையை பேசினார். இதற்காக இந்தியா முழுவதும் அவர் மீது 1100 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஆனால் அவர் தனது தாத்தாவைப் போல் எதையும் சமாளித்து வெற்றி பெறுவார்.” என்று தெரிவித்தார்.

MUST READ