spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்: 22 வயது கல்லூரி மாணவியை கொலை செய்த அண்ணன்

இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்: 22 வயது கல்லூரி மாணவியை கொலை செய்த அண்ணன்

-

- Advertisement -

பல்லடம் அருகே வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை 22 வயது கல்லூரி மாணவி காதலித்ததால் அண்ணனே ஆணவக்கொலை செய்து உள்ளதாக விசாரணையில் தொியவந்துள்ளது.இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்: 22 வயது கல்லூரி மாணவியை கொலை செய்த அண்ணன்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்த தண்டபாணி மற்றும் தங்கமணி என்பவரின் மகள் வித்யா. 22 வயதுடைய வித்யா கோவை அரசு கல்லூரியில் முதுகலை பட்டம் பயின்று வந்துள்ளார். திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்ற இளைஞர் அதே கல்லூரியில் வித்யாவுடன் படித்து வருகிறார். மூன்று வருடங்களாக இருவரும் காதலி தந்ததாக கூறப்படும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, வெண்மணி வித்யாவின் வீட்டிற்கு பெண் கேட்டு வந்ததாகவும், வித்யாவின் பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது.

we-r-hiring

இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வித்யாவின் பெற்றோர்கள் கோவிலுக்கு சென்று விட்டு, திரும்பி வந்து பார்த்தபோது வித்யாவின் மீது பீரோ விழுந்து தலையில் காயமடைந்த நிலையில் சடலமாக கிடந்தாா். சம்பவம் குறித்து காவல்துறைக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் வித்யாவின் பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் வித்யாவின் உடலை அருகில் இருந்த சுடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர். தகவல் அறிந்த காதலன் வெண்மணி வித்யாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளாா்.

காதலன் வெண்மணி அளித்த புகாரின் அடிப்படையில் காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் தற்பொழுது வித்யாவின் வீட்டில் கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்து வருகின்றாா்கள். பருவாய் கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி இது குறித்து காமநாயக்கன் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளாா். புகாரினை தொடா்ந்து வழக்கு பதிவு செய்து, போலீசார் வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் புதைக்கப்பட்ட வித்யாவின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனா்.

முதற்கட்டமாக உயிரிழந்த வித்தியாவின் பெற்றோரிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று மாலை திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை தலைமை பேராசிரியர் மருத்துவர் குகன், உதவி பேராசிரியர் மருத்துவர் முத்துக்குமார் ஆகியோர் பருவாய் சுடுகாட்டில் புதைக்கப்பட்டுள்ள வித்யாவின் உடலை தோண்டி எடுத்து அங்கேயே உடற்கூறு ஆய்வு செய்தனர். உடற்கூறு ஆய்வில் வித்யாவின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது தெரியவந்தது.

 தொடர்ச்சியாக வித்யாவின் தந்தை தாய் மற்றும் அவரது சகோதரன் சரவணன் ஆகியோாிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால், தனது தங்கையை இரும்பு கம்பியால் தலையில் தாக்கி நான் தான் கொன்றேன் என உயிரிழந்த வித்யாவின் சகோதரன் சரவணன் வாக்கு மூலம் அளித்துள்ளார். மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால் வித்யா ஆணவ கொலை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தொடர்ச்சியாக போலீசார் வித்யாவின் தாய் மற்றும் தந்தையிடமும் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனா்.

MUST READ