spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலையா? காரணம் என்ன?

பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலையா? காரணம் என்ன?

-

- Advertisement -

பெற்றோர் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து வரும் நிலையில் திருமணத்தில் விருப்பம் இல்லாததால் விபரீத முடிவுபெண் காவலர் தூக்கிட்டு தற்கொலையா? காரணம் என்ன?விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன். இவரது மகள் சுமதி(30) கடந்த 2017 ஆண்டு தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து தற்போது புளியந்தோப்பு போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். சுமதிக்கு இரு அண்ணன்களும், ஒரு அக்காவும் உள்ளனர்.

கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சுமதி  செம்பியம் காவலர் குடியிருப்பில் சக பெண் காவலர் ஜெயலட்சுமி என்பவருடன் ஒன்றாக வசித்து வருகிறார். நேற்று இரவு காவலர் சுமதி பணி முடிந்து வீட்டிற்கு சென்று சக காவலர் ஜெயலட்சுமி உடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது சுமதி துணியை காயவைத்து விட்டு வருவதாக கூறி விட்டு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வராததால் சந்தேகமடைந்த ஜெயலட்சுமி அறையிலிருந்து வெளியே வந்து பார்த்த போது ஹாலில் சுமதி தூக்கிட்ட நிலையில் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே கூச்சலிட்டார்.

we-r-hiring

அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒடி வந்து காவலர் சுமதியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.‌ அங்கு முதலுதவி அளித்த பின் சுமதியை மேல் சிகிச்சைக்காக ரெட்டேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அங்கு சுமதியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

‌ பின்னர் காவலர் ஜெயலட்சுமி இது குறித்து செம்பியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் போலீசார் விரைந்து வந்து காவலர் சுமதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் செம்பியம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட காவலர் சுமதிக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து மாப்பிள்ளை பார்த்து வந்ததும் ஆனால் சுமதிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால் பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்தும் அவர்கள் திருமணத்திற்கு வற்புறுத்தி வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும் போலீஸார் சுமதி தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டை சீரழிக்கும் திராவிட மாடல் அரசு மாற்றப்பட வேண்டும்-அன்புமணி வலியுறுத்தல்

MUST READ