இமாச்சலத்தில் நள்ளிரவில் இரண்டாவது மாடியில் தூங்கிக் கொண்டிருந்த நாய் திடீரென குரைத்து சத்தமிட்டதால் 67 பேரின் உயிா் காப்பாற்றப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 20 ஆம் தேதி முதலே கனமழை புரட்டி போட்டு வருகிறது. மேகவெடிப்பு காரணமாக பெய்த பலத்த மழையால் நிலச்சரிவும் ஏற்பட்டது. ஜூன் 20ஆம் தேதி முதல் ஜூலை 6ஆம் தேதிவரை 19 முறை மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்தது. இதனால் 16 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக மண்டி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
ஜூன் 30 அன்று, நள்ளிரவில் மண்டி மாவட்டத்தில் உள்ள தரம்பூர் பகுதியில் உள்ள சியாதி கிராமம் நிலச்சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்டது. நிலச்சரிவிற்கு முந்தைய நாள் தனது வீட்டின் இரண்டாவது மாடியில் தூங்கிக் கொண்டிருந்த நாய் திடீரென நள்ளிரவில் கடுமையாக சத்தத்துடன் குரைத்துள்ளது. நாயின் சத்தைதை கேட்டு அதன் உரிமையாளர் கண் விழித்து பாா்த்த போது, வீட்டு சுவரில் முழுவதும் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் உள்ளே வருவதை பார்த்து அதிா்ச்சியடைந்துள்ளாா்.

உடனடியாக அவர் அந்த நள்ளிரவில் அந்த கிராமத்தில் இருந்த அனைவரையும் எழுப்பி எச்சரித்துள்ளார். இதனால் கிராமத்திலிருந்த அனைவரும் அருகிலிருந்த தேவி கோவிலுக்குள் தஞ்சம் புகுந்தனா். பின்னர் சிறிது நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமத்தில் உள்ள பல வீடுகள் தரைமட்டமாகின. நாயின் சத்தத்தால் சியாதி கிராமத்தின் 20 குடும்பங்களை சேர்ந்த 67 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
காதல் திருமணம்…கடத்தல் வழக்கில் திருப்பம்… பூவை.ஜெகன் மூர்த்தி மற்றும் ஏ.டி.ஜி.பி.ஜெயராமனுக்கு சமன்