spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகரூர் விவகாரம் குறித்து அவதூறு பரப்பியதாக பிரபல யூடியூபர் கைது!

கரூர் விவகாரம் குறித்து அவதூறு பரப்பியதாக பிரபல யூடியூபர் கைது!

-

- Advertisement -

கரூர் சம்பவம் குறித்து அரசுக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளாா்.கரூர் விவகாரம் குறித்து அவதூறு பரப்பியதாக பிரபல யூடியூபர் கைது!கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, அரசுக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளாா்.  சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார், நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திலேயே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக மாரிதாஸ் தனது வலைதள பக்கத்தில், “இன்று மாலை, நீதிமன்றத்தில் திமுக கும்பல் நடத்திய மொத்த நாடகத்தின் விவரம் வீடியோவாக வெளியாகும். 10 ரூபா பாலாஜி.. விஜய் எதிராக நீதிமன்றத்தில் நடந்த தந்திரம் என்ன – மாலை 6 மணிக்கு..” என்று பதிவிட்டிருந்தார். மேலும், விஜய் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுருந்தாா். அந்த பதிவுக்குப் பின்  சில நிமிடங்களிலேயே, ”என் இல்லத்திற்கு காவல் துறை கைது செய்ய வந்துள்ளது.” என்றும் ட்வீட் செய்திருந்தார். இதற்கிடையில் அவர் கைது செய்யப்பட்டார்.

we-r-hiring

கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் ஏற்பட்ட பெரும் நெரிசலில், குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். 100-க்​கும் மேற்பட்டோர் படு​கா​யம் அடைந்​தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்​து, அரசி​யல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்​வு​களுக்கு தடை விதிக்க வேண்​டும்  என்று கோரி, வில்​லி​வாக்​கத்தை சேர்ந்த பி.ஹெச்​.​தினேஷ் என்​பவர் சென்னை உயர் நீதிமன்றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கு நீதிபதி என்​.செந்​தில்​கு​மார் முன்னிலையில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது அவர், “கரூர் சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​களுக்கு ஆழ்ந்த இரங்​கல்.   காணொளி​கள் மிகுந்த வேதனை அளிக்​கின்​றன. இந்த வழக்​கில் 2 பேர் மட்​டும் கைது செய்யப்பட்​டுள்​ளனர். வேறு என்ன நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது? அனைத்​தை​யும் தமிழக அரசு அனு​ம​தித்​திருப்​பது அதிருப்தி அளிக்​கிறது.

கரூர் சம்பவம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு. நீதிமன்றம் கண்மூடி பார்க்காது. பொறுப்பை யாரும் தட்டிக்கழிக்க முடியாது” என்று கண்டனம் தெரிவித்தார். பிரச்​சா​ரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்​பட்​டு, பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராள​மானோர் உயி​ரிழந்த நிலை​யில், கட்சித் தொண்​டர்​களை​யும், ரசிகர்​களை​யும் பொறுப்​பற்ற முறை​யில் கைவிட்​டு​விட்டு தவெக தலை​வர் விஜய் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் தப்பிச் சென்றுள்ளனர். அவர்​களுக்கு தலை​மைத் தன்மை இல்​லை. சம்​பவத்​துக்கு பொறுப்​பேற்​காதது கண்​டனத்​துக்​குரியது.” எனவும் நீதிபதி கருத்து தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், இது விவகாரம் தொடர்பாக வீடியோ வெளியிடுவதாக அறிவித்திருந்த யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல், கரூர் சம்பவத்தைச் சுற்றியுள்ள  வதந்திகளை சமூக வலை​தளங்​களில் பரப்​பிய​தாக பாஜக கலை மற்​றும் கலாச்​சார பிரிவு மாநில செய​லா​ளர் சகா​யம் (38), தவெக மாங்​காடு உறுப்​பினர் சிவனேசன் (36), அதே கட்​சி​யின் ஆவடி வட்​டச் செய​லா​ளர் சரத்​கு​மார் (32), யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு உள்ளிட்டோரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டிருந்தனர். தற்போது அந்த வரிசையில் மாரிதாஸும் இணைந்துள்ளார்.

‘பைசன்’ படத்தில் நடிக்க விக்ரமிடம் பேசினேன்…. ஆனா அவர்…. மாரி செல்வராஜ் பேட்டி!

MUST READ