spot_imgspot_imgspot_imgspot_img
Homeதிருக்குறள்125 - நெஞ்சொடுகிளத்தல், கலைஞர் மு. கருணாநிதி,விளக்க உரை

125 – நெஞ்சொடுகிளத்தல், கலைஞர் மு. கருணாநிதி,விளக்க உரை

-

- Advertisement -

125. நெஞ்சொடுகிளத்தல் கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1241. நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
          எவ்வநோய் தீர்க்கு மருந்து

கலைஞர் குறல் விளக்கம்எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட எதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து. நெஞ்சே! உன்னால் சொல்ல முடியுமா?

we-r-hiring

1242. காத லவரிலர் ஆகநீ நோவது
          பேதமை வாழியேன் நெஞ்சு

கலைஞர் குறல் விளக்கம்அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும். நீ வாழ்க.

1243. இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பிரிந்துள்ளல்
          பைதல்நோய் செய்தார்கண் இல்.

கலைஞர் குறல் விளக்கம்பிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு நம்மிடம் இரக்கமில்லாத போது, நெஞ்சே! நீ மட்டும் இங்கிருந்து கொண்டு அவரை எண்ணிக் கலங்குவதால் என்ன பயன்?

1244. கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
          தின்னும் அவர்க்காணல் உற்று

கலைஞர் குறல் விளக்கம்நெஞ்சே! நீ காதலரிடம் செல்லும்போது கண்களையும்கூட அழைத்துக்கொண்டு போ;  இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்று என்னையே அவை தின்றுவிடுவது போல் இருக்கின்றன.

1245. செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞசேயம்
           உற்றால் உறாஅ தவர்.

கலைஞர் குறல் விளக்கம்நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கை விட்டு விட முடியுமா?

1246. கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புதலந்தணராய்
          பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு

கலைஞர் குறல் விளக்கம்நெஞ்சே! கூடிக் கலந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் ஒரு தடவைகூடப் பிணங்கியறியாத நீ இப்போது அவர் மீது கொள்ளுகிற கோபம் பொய்யானது தானே?

1247. காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
          யானோ பொறேனிவ் விரண்டு

கலைஞர் குறல் விளக்கம்நல்ல நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது விட்டு விடு;  அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல் தடுக்கும் நாணத்தையாவது விட்டு விடு. இந்த இரண்டு செயல்களையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது.

1248. பிரிந்தவர் நல்காரென் றெங்கிப் பிரிந்தவர்
          பின்செல்வாய் பேதையென் நெஞ்சு

கலைஞர் குறல் விளக்கம்நம்மீது இரக்கமின்றிப் பிரிந்து விட்டாரேயேன்று ஏங்கிடும் அதே வேளையில் பிரிந்தவர் பின்னாலேயே சென்று கொண்டிருக்கும் என்நெஞ்சம் ஓர் அறிவற்ற பேதை போன்றதாகும்.

1249. உள்ளத்தார் காத வலராக உள்ளிநீ
          யாருழைச் சேறியென் நெஞ்சு

கலைஞர் குறல் விளக்கம்உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து, வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?

1250. துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா
          இன்னும் இழத்தும்  கவின்

கலைஞர் குறல் விளக்கம்சேராமல் பிரிந்து சென்ற காதலரைச் சிந்தையில் வைத்திருப்பதால் மேலும் மேனியெழில் இழந்து மெலிந்து அழிய வேண்டியுள்ளது.

MUST READ