Homeசெய்திகள்க்ரைம்Home Tour வீடியோவால் விபரீதம்! யூடியூபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை

Home Tour வீடியோவால் விபரீதம்! யூடியூபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை

-

- Advertisement -

மத்தியப் பிரதேசத்தில் பிரபல யூடியூபர் ஒருவர் வெளியிட்ட Home Tour வீடியோ, அவருக்கே பெரும் சிக்கலை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. வீடியோவில் வீடு, நகைகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை விரிவாகக் காட்டிய நிலையில், அவரது வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Home Tour வீடியோவால் விபரீதம்! யூடியூபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளைமத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தின் மோகனி கிராமத்தைச் சேர்ந்த யூடியூபர் ரச்னா குர்ஜாரின் வீட்டிற்குள் அதிகாலை நேரத்தில் புகுந்த மர்ம நபர்கள், அவரையும் குடும்பத்தினரையும் ஒரு அறைக்குள் அடைத்து வைத்து கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

we-r-hiring

குடும்பத்தினர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், பணம் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களை அபகரித்துச் சென்றுள்ளனர். மேலும், ஒரு அட்டைப்பெட்டி எனர்ஜி பானத்தையும் அவர்கள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பேசிய ரச்னா குர்ஜார், கொள்ளையர்கள் வீட்டின் சிசிடிவி கேமராக்களின் கோணங்களையும் மாற்றியதாக தெரிவித்துள்ளார். இதனால் அவர்களின் முகங்கள் பதிவாகாமல் தப்பித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து நார்வார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளைச் சம்பவம் நடந்ததை ஷிவ்புரி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் முலே உறுதிப்படுத்தியுள்ளார்.

ஒரு லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்ட ரச்னா குர்ஜார், சமீபத்தில் தனது வீட்டின் அமைப்பு, அறைகள், நகைகள், பணம் மற்றும் வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் Home Tour வீடியோக்களை யூடியூபில் பதிவிட்டிருந்தார். குறிப்பாக, வீட்டின் பல்வேறு பகுதிகளையும், மதிப்புமிக்க நகைகள் மற்றும் பணத்தையும் வீடியோவில் காட்டியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டு கொள்ளையர்கள் திட்டமிட்டு குற்றத்தை அரங்கேற்றியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் சொத்து விவரங்களை பகிரும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டியுள்ளது.

கோயம்பேட்டில் இளம் பெண் கொலை – இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்

MUST READ