spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்- பாலச்சந்திரன்

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்- பாலச்சந்திரன்

-

- Advertisement -

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்- பாலச்சந்திரன்

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும், சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Rain

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் மழை தொடரும். சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 73 ஆண்டுகளுக்கு பிறகு, 3வது அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது (8 செ.மீ). அடுத்த 3 தினங்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை தொடரும். 1996க்கு பிறகு ஜூன் மாதத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும், சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

we-r-hiring
கனமழை காரணமாக, நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!
File Photo

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழை பெய்துள்ளது. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழ்நாட்டுக்கான தென்மேற்கு பருவமழை இயல்பை விட 11 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஜூன் 20,21,22 ஆகிய தேதிகளில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், திருவண்ணாமலை, ராணிப்பேட்டையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது” எனக் கூறினார்.

MUST READ