spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்கடலூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஓட ஓட வெட்டி படுகொலை

கடலூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஓட ஓட வெட்டி படுகொலை

-

- Advertisement -

கடலூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஓட ஓட வெட்டி படுகொலை

கடலூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட்டப்பகலில் பயங்கரம்; ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் ஓட ஓட வெட்டி படுகொலை!,  the-incident-where-the-husband-of-the-panchayat-head-of-fishing-village-in- cuddalore-district-was-murdered

கடலூர் அடுத்த தாழங்குடா சேர்ந்தவர் மதியழகன் (வயது 45). இவரது மனைவி சாந்தி (வயது 40). இவர் தற்போது ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் மதியழகன் தனது குடும்பத்தினருடன் செம்மண்டலம் ஜெய்தேவ் நகர் மற்றும் புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் பகுதியில் வசித்து வந்தார். இன்று காலை மதியழகன் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள சிவன் கோவிலில் சாமி கும்பிட்டு தனது வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்‌. அப்போது திடீரென்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் அருகில் நெருங்கி வந்தனர். இதனை பார்த்து சுதரித்து கொண்ட மதியழகன் அந்த நபர்களை பார்த்தபோது கையில் வீச்சருவாளுடன் கொலை செய்வதற்கு வந்தது தெரிய வந்தது.

we-r-hiring

கடலூர் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன் படுகொலை செய்யப்பட்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இதனை தொடர்ந்து மதியழகன் அங்கிருந்து வேகமாக ஓட தொடங்கினார். அப்போது அந்த கும்பல் மதியழகனை துரத்தி சென்று நடுரோட்டில் சரமாரியாக வெட்டினர். மேலும் மதியழகன் முகத்தில் கடுமையாக வெட்டியதால் முகம் முழுவதும் சிதைந்து முகம் உருக்குலைந்தது. மேலும் கொலை செய்த கும்பல் மதியழகன் முகத்தில் வீச்சருவாளை சொருகி வைத்த நிலையில் அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பித்து சென்றனர். மேலும் கொலை செய்த நபர்கள் 7-க்கும் மேற்பட்ட வீச்சருவாளர்களை அந்த பகுதிகளில் தூக்கி வீசியது தெரியவந்தது. இத்தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை தொடங்கினர். இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட மதியழகன் மனைவி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மற்றும் அவரது மகனுக்கு தகவல் தெரிந்தது‌ .

இதனை தொடர்ந்து சாலையில் அலறி அடித்துக் கொண்டு மதியழகன் உடலை பார்த்து கதறி துடித்து அழுதனர். மேலும் பட்டப்பகலில் நடு ரோட்டில் மதியழகன் ஒரு கும்பல் கொலை செய்த சம்பவத்தை பார்த்து அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அலறடித்துக் கொண்டு தெறித்து ஓடினார்கள். மேலும் தகவல் காட்டு தீ போல் பரவியதால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். ஆனால் போலீசார் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க அனைவரையும் உடனடியாக கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தனர்.

கடலூர் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன் படுகொலை செய்யப்பட்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்த நிலையில் போலீசார் முதற்கட்ட விசாரணையில் , குண்டு உப்பலவாடி ஊராட்சி மன்ற தலைவருக்கு, தற்போது கொலை செய்யப்பட்டு இறந்த மதியழகன் மனைவி சாந்தியும் ஏற்கனவே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி தரப்பும் போட்டியிட்டனர். அப்போது வாக்குகள் எண்ணும் சமயத்தில் மதியழகன் மனைவி சாந்தி வெற்றி பெற்றதாக அறிவித்தபோது மாசிலாமணி தரப்பினர் மதியழகனுக்கு கொலை மிரட்டும் விடுத்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக தனது மனைவி ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் வெற்றி பெற்றாலும் நான் ஊருக்கு சென்றால் எனக்கு என்ன நேரிடுமோ என்ற அச்சத்தில் வாக்கு எண்ணும் மையத்திலேயே காலை முதல் இரவு வரை காத்திருந்தார்.

பின்னர் போலீசார் மதியழகனை பாதுகாப்பாக ஊருக்குள் கொண்டு சென்று இரு தரப்பினரும் அழைத்து சரியான முறையில் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் இவர்களுக்குள் தொடர்ந்து முன் விரோதம் இருந்து வந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மாசிலாமணி தம்பி மதிவாணன் என்பவர் கண்டக்காடு என்ற பகுதியில் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். மேலும் இந்த கொலை நடந்ததை தொடர்ந்து படகுகள் வலைகளை எரித்தும், வீடுகளை அடித்து நொறுக்கப்பட்டது. இதன் காரணமாக தாழங்குடா மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் பெரும் கலவர பூமியாக மாறியதோடு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இது மட்டுமன்றி மதிவாணன் கொலை வழக்கில் தற்போது கொலை செய்யப்பட்டு இறந்த மதியழகன் உட்பட பலரை போலீசார் கைது செய்தனர். மேலும் கலவரத்தில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்டோர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த நிலையில் மதியழகன் மற்றும் பலர் ஜாமினில் வெளியில் வந்தும் மீண்டும் தங்களது ஊருக்கு செல்லவில்லை. இதன் காரணமாக அனைவரும் தங்களது உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தங்கி வந்தனர். இந்த நிலையில் மதியழகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஊருக்குள் விடுவதற்கு கடலூர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிப்பதற்காக தயார் நிலையில் இருந்து வந்தனர்.

பட்டப்பகலில் பயங்கரம்.. ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஓட ஓட வெட்டி படுகொலை..  அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.!

இந்த நிலையில் இன்று காலை பட்டப் பகலில் மதியழகனை ஒரு கும்பல் துரத்திக்கொண்டு நடு ரோட்டில் வெட்டி கொலை செய்து உள்ளனர். மேலும் இந்த கொலை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்த நிலையில் பழிக்கு பழி நடந்த கொலை சம்பவம்? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மீனவ கிராம பகுதி சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மீனவ கிராமத்தினர் இடையே பெரும் பதற்றம் நீடித்து வருகின்றது. மேலும் தாழங்குடா உள்ளிட்ட மீனவ கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். கொலை வழக்கு சம்பந்தமாக கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் டெல்டா பிரிவு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இது மட்டும் இன்றி கொலை செய்யப்பட்ட கும்பலை பிடிப்பதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவு பேரில் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக மீனவ கிராமங்கள் மற்றும் கடலூர் பகுதியில் பெரும் பதட்டமும் பரபரப்பும் நீடித்து வருகின்றது.

MUST READ