
எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று (ஜூலை 17) காலை 09.30 மணிக்கு சென்னையில் விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பெங்களூருவுக்கு செல்கிறார்.

விழுப்புரம் சாலையில் கோரவிபத்து…4 மீனவ பெண்கள் உயிரிழப்பு… தமிழக அரசு நிதியுதவி அறிவிப்பு!
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இன்றும் (ஜூலை 17), நாளையும் (ஜூலை 18) பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசிய மாநாட்டு கட்சி, சமாஜ்வாதி உள்ளிட்டக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு, குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுப்பது, பிரதமர் வேட்பாளர் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து தலைவர்களுக்கும் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா விருந்தளிக்கவுள்ளார்.
‘சத்யதேவ் சட்ட அகாடமி’யைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இதனிடையே, தமிழகத்திற்கு கர்நாடக தர வேண்டிய காவிரி தண்ணீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் உள்ளிட்டவைக் குறித்து கர்நாடக மாநில முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.