Homeசெய்திகள்இந்தியாஆற்றில் பிடிபட்ட டால்பினை சமைத்து சாப்பிட்ட மீனவர்கள்

ஆற்றில் பிடிபட்ட டால்பினை சமைத்து சாப்பிட்ட மீனவர்கள்

-

- Advertisement -

ஆற்றில் பிடிபட்ட டால்பினை சமைத்து சாப்பிட்ட மீனவர்கள்

உத்தரபிரதேசத்தில் மீனவர்கள் வலையில் சிக்கிய டால்பினை சமைத்து சாப்பிட்ட மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Fishermen arrested for cooking and eating dolphin

உத்தரபிரதேசம் மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கங்கை நதியில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது வலையில் நன்னீர் டால்பின் ஒன்று சிக்கியது. உடனே அதனை பிடித்த மீனவர் ரஞ்சித் குமார், அதனை தனது இருப்பிடத்துக்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டதாக தெரிகிறது.

டால்பினை ரஞ்சித்குமார் தோளில் சுமந்து சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, யமுனைக் கரையில் உள்ள மீனவர்களின் சொந்த கிராமமான நசிர்பூருக்கு சென்ற வனத்துறையினர், ரஞ்சித்குமாரை கைது செய்தனர். அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய அரியவகை டால்பினை வேட்டையாடியதாக ஐந்து பேர் மீது வன உயிர் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரஞ்சித்குமாரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தியபோது, அவர் எனக்கு டால்பினை பிடித்து சாப்பிட கூடாது என்பது தெரியாது எனக் கூறியுள்ளார்.

 

MUST READ