spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஉயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 2 லட்சம் நிதி!

உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 2 லட்சம் நிதி!

-

- Advertisement -

 

MKStalin

we-r-hiring

மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அசாத்திய உழைப்பின் மூலம் ஜெயம் கண்ட தனி ஒருவன்… ஜெயம் ரவி வெற்றிக் கதை!

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மருதத்தூர் கிராமத்தில் உள்ள கோயிலில் இன்று (செப்.10) காலை கும்பாபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள கட்டிடத்தின் வெளிப்புற மேற்கூரை எதிர்பாராத விதமாக ஸ்ரீமுஷ்ணம் வட்டம், காவனூர் கிராமத்தைச் சேர்ந்த சுதந்திர தேவி (வயது 15) என்பவர் மீது இடிந்து விழுந்ததில், அவருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

நான் அப்படி ஆகுவேன் – மாற்றம் முன்னேற்றம் – 19

உயிரிழந்த சுதந்திரதேவியின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் 2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ