spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைவிஜயலட்சுமி சீமான் வழக்கு -இன்று சீமான் ஆஜர்

விஜயலட்சுமி சீமான் வழக்கு -இன்று சீமான் ஆஜர்

-

- Advertisement -

சென்னை வளசரவாக்கம் காவல் நிலைய விசாரணைக்காக சீமான் வரும்போது தொண்டர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விஜயலட்சுமி  சீமான் வழக்கு -இன்று சீமான் ஆஜர்நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்தார். மேலும் 7 முறை தன்னை கருக்கலைப்பு செய்ய தூண்டியதாகவும் சீமான் மீது அவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். புகாரின் அடிப்படையில், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி சீமானுக்கு சம்மன் அனுப்பிய நிலையில், கடந்த 12-ஆம் தேதி அவருக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜரானார்.இதன் பின்னர், இன்று ஆஜராக வேண்டும் என 2-வது முறையாக சீமானுக்கு வளசரவாக்கம் காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக சீமான் மீது அளித்த புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றார்.புகாரை திரும்ப பெற்றதற்கான ஆவணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

we-r-hiring

விஜயலட்சுமி அளித்த புகார் மனு இன்னும் முடித்து வைக்கப்படாத நிலையில், சம்மன் அனுப்பப்பட்டதன் அடிப்படையில் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இன்று சீமான் ஆஜரானார். அப்போது 500 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

MUST READ